Last Updated : 16 Jul, 2015 02:31 PM

 

Published : 16 Jul 2015 02:31 PM
Last Updated : 16 Jul 2015 02:31 PM

எந்திரன் 2 அப்டேட்ஸ்: தீபிகா, கத்ரீனா உடன் பேச்சுவார்த்தை

'எந்திரன் 2' படத்தில் நாயகிகளாக நடிக்க தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.

'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமாக 'எந்திரன் 2' என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'எந்திரன் 2'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் உள்ளிட்டவர்கள் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.

நாயகிகளாக நடிக்கப் போவது யார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இந்தி திரையுலகின் முன்னணி நாயகிகளான தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரிடம் பேசி இருக்கிறார் ஷங்கர்.

முழுக்கதையையும் முடித்துவிட்டு தங்களுடைய பாத்திரங்களைப் பற்றி சொல்கிறேன். அடுத்த வருடம் ஆரம்பித்தில் தொடங்க இருக்கும் படப்பிடிப்புக்கு தேதிகள் இருக்குமா என்று இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

கதைக்கு முழுவடிவம் கொடுத்த பின்னர் நாயகன், நாயகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் ஒப்பந்தமானதும் அக்டோபர் மாதம் முறைப்படி படம் பற்றி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்பிரம்மாண்ட படத்தை லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x