Last Updated : 21 Jul, 2015 02:45 PM

 

Published : 21 Jul 2015 02:45 PM
Last Updated : 21 Jul 2015 02:45 PM

லொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில் சந்தானம்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் சந்தானம்.

தன்னுடன் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் அனைவரையும் இயக்குநராக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சந்தானம். முருகன் மற்றும் ப்ரேம் ஆனந்த் என தன்னிடம் பணியாற்றிய இருவரையும் முருகானந்த் என்ற பெயரில் 'இனிமே இப்படித்தான்' படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் சந்தானம். அந்நிகழ்ச்சியில் இயக்குநராக பணியாற்றிய ராம்பாலா இயக்கவிருக்கும் படத்தில் தற்போது நாயகனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம்.

இது முழுக்க பேய் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கிறது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தைப் போல இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க சந்தானம் தயாரிக்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x