Published : 06 May 2014 10:57 AM
Last Updated : 06 May 2014 10:57 AM

உ.பி.யில் நக்சல் அச்சுறுத்தல்: தேர்தல் நாளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

உத்தர பிரதேசத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் நக்சல் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க அந்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 15 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, மே 7 ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது அங்கு உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து மே 7ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட வாக்குப்பதிவின் போது அங்கு பாதுகாப்பை அதிகரிக்க அந்த மாநில தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி உமேஷ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில தொகுதிகளில் நக்சல் அச்சுறுத்தால் அதிகமாக இருப்பதாலும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய எதிர்கட்சி தலைவர்களான அமித் ஷா, மாயாவதி உள்ளிட்டோர் போட்டியிடுவதால் உத்தரபிரதேசத்தின் இறுதிக்கட்ட தேர்தல் வாக்க்குப்பதிவு அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x