Last Updated : 05 May, 2015 11:41 AM

 

Published : 05 May 2015 11:41 AM
Last Updated : 05 May 2015 11:41 AM

மீண்டும் காக்கி உடை அணியும் கமல்: விரைவில் படப்பிடிப்பு

தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கவிருக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் கமலஹாசன்.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டார் கமல். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

"இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் துவங்கும்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

மேலும், "முதலில் இப்படத்தை முழுக்கவே மொரிஷியஸில் படமாக்க திட்டமிட்டோம். இதற்கான படப்பிடிப்பு இடங்களை கூட கமல் இறுதி செய்து வைத்திருந்தார். ஆனால், சில சட்ட நெறிமுறைகள் சிக்கலால் இந்தியாவிலேயே படமாக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்கள்.

இப்படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜிப்ரான். கமலுடன் இணைந்து அவர் பணியாற்றும் 4வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x