Last Updated : 29 May, 2014 12:30 PM

 

Published : 29 May 2014 12:30 PM
Last Updated : 29 May 2014 12:30 PM

முடிவடைந்த காவியத்தலைவன் படப்பிடிப்பு

கடந்த ஒரு வருடமாக வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்த 'காவியத்தலைவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்தார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

1930ல் இருந்த நாடக கம்பெனிகள் சம்பந்தப்பட கதை என்பதால் காரைக்குடி, தென்காசி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இறுதி பாடலுக்காக மட்டும் படக்குழு காத்திருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலை கொடுத்தவுடன், சென்னையில் செட் போடப்பட்டு சித்தார்த் கலந்து கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று இரவு ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்றது.

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் தளத்தில், " வசந்தபாலனின் 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு முடிவுற்றது. மறக்க முடியாத பயணம். இறுதிகட்ட பணிகள் துவங்கிவிட்டன. படக்குழுவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

இறுதிகட்டப் பணிகள் முடிந்து, இரண்டு மாதத்திற்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x