Published : 21 Mar 2015 05:55 PM
Last Updated : 21 Mar 2015 05:55 PM
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தை முடித்துவிட்டு, தற்போது வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணமாகும் ஒரு இளைஞனின் கதையை படமாக்க இருக்கிறார் பிரபு சாலமன். இதற்காக, ரயிலில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்.
படத்தின் நாயகியாக புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT