Last Updated : 12 Mar, 2015 12:16 PM

 

Published : 12 Mar 2015 12:16 PM
Last Updated : 12 Mar 2015 12:16 PM

ஸ்நாப்டீலில் முதலீடு செய்ய அலிபாபா திட்டம்?

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய சீனா நிறுவனமான அலிபாபா திட்டமிட்டுவருவதாக தெரிகிறது. ஒருவேளை இந்த முதலீடு உறுதியானால் இந்தியாவில் இ-காமர்ஸ் பிரிவில் அலிபாபா நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும்.

ஸ்நாப்டீல் நிறுவனம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட்டுவருகிறது. தொழில் விரிவாக்கப்பணிகளுக்காக 100 கோடி டாலர் (6,200 கோடி ரூபாய்) திரட்ட திட்டமிடுவதாக இது குறித்த தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் குனால் பஹல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அலிபாபா நிறுவனத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல்கள் யாரும் தெரிவிக்கவில்லை. ஸ்நாப்டீல் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 62.7 கோடி டாலர் முதலீடு செய்தது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் முதலீடு செய்ய அலிபாபா நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. ஆனால் இ-காமர்ஸ் பிரிவில் இதுவரை இந்த நிறுவனம் முதலீடு செய்யவில்லை. தன்னுடைய துணை நிறுவனமான ஆன்ட் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் மூலமாக பேடிஎம் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை அலிபாபா கடந்த மாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x