Last Updated : 10 Mar, 2015 12:36 PM

 

Published : 10 Mar 2015 12:36 PM
Last Updated : 10 Mar 2015 12:36 PM

ஜூன் மாதம் துவங்குகிறது மிஷ்கின் - சரத்குமார் படம்

'பிசாசு' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படம் குறித்து விசாரித்த போது, "ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். அவரோடு நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார் என்று 'பிசாசு' படத்துக்கு முன்னரே செய்திகள் வெளியானது. தற்போது இருவருமே இப்படத்தின் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x