Last Updated : 13 Mar, 2015 12:24 PM

 

Published : 13 Mar 2015 12:24 PM
Last Updated : 13 Mar 2015 12:24 PM

டி.ஆரைப் பெருமைப்படுத்தும் பாடல் டண்டணக்கா: ஜெயம் ரவி அறிக்கை

டி.ஆரைப் பெருமைப்படுத்தும் விதமாகவே 'டண்டணக்கா' பாடல் அமைக்கப்பட்டுள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்க லஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் 'டண்டணக்கா' என்ற பாடலை இமான் இசையில் அனிருத் பாடியிருக்கிறார். இப்பாடல் டி.ஆரை கிண்டல் செய்துவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து ஜெயம் ரவி அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பது:

"'ரோமியோ ஜூலியட்' படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னம்பிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்..இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேசன்.

அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான “டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரைப் பற்றியும் இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம்.

எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமைபடுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

அதனால், தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன்." என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x