Published : 28 Mar 2015 02:27 PM
Last Updated : 28 Mar 2015 02:27 PM

கரும்பு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்: அரசுக்கு கோரிக்கை

சிறு, குறு விவசாயிகள் என நிவாரணம் வழங்குவதில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க செயல் தலைவர் கே.வி.ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கே.வி.ராஜ்குமார் போளூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''கர்நாடகாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த 5 ஆண்டுகளாக வறட்சியால் விவசாயிகள் வேறு வேலைகளுக்கு செல்கின்றனர். சிறு, குறு விவசாயிகள் என நிவாரணம் வழங்குவதில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பான, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ளனர். 16 தனியார் சர்க்கரை ஆலைகளும் நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ராஜ்குமார் கோரிக்கை வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x