Last Updated : 21 Mar, 2015 01:20 PM

 

Published : 21 Mar 2015 01:20 PM
Last Updated : 21 Mar 2015 01:20 PM

ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்தேன்: சிம்பு உருக்கம்

ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்ததாக சிம்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

'வாலு' படத்தில் நடிக்க ஆரம்பித்த போது சிம்பு - ஹன்சிகா இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், நீண்ட நாட்கள் அக்காதல் நீடிக்கவில்லை. சிம்பு தனது காதல் பிரிவு குறித்து பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்தாலும், ஹன்சிகா இது வரை தனது காதல் குறித்து எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

காதல் பிரிவிற்கு பிறகும் கூட 'வாலு' படத்துக்காக ஒரு பாடலில் இணைந்து நடித்தார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'வாலு' சென்சார் முடிந்து, மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பாலிவுட் லைஃப் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு. "நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். வாலு படத்திற்காக சென்ற வருடம் பாங்காக்கிற்கு படப்பிடிப்பிற்குக் கூட சென்றோம்.

பிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை; எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இல்லை. பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன். எனினும், நிலைமையைப் புரிந்து கொண்டேன், அதைக் கையாள வேண்டிய சூழலின்போது, நான் அதை அப்போது செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்."என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x