Published : 11 Mar 2015 10:10 AM
Last Updated : 11 Mar 2015 10:10 AM

மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? - தெலுங்கு தேசத்துக்கு ஜெகன் சவால்

ஆந்திராவுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறும் தெலுங்கு தேசம் கட்சியினர், தைரியம் இருந்தால் மத்திய அரசில் இருந்து விலகவேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்துவருகிறது. இதில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் பேசும்போது, “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றும், போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஒருபுறம் கூட்டணி, மறுபுறம் எதிர்ப்பு என்று ஆளும் கட்சியினர் நாடகமாடுகின்றனர். தைரியம் இருந்தால் மத்திய அரசிலிருந்து வெளியேறுங்கள்” என்றார்.

ஜெகனின் இந்தப் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்கு முன் மக்களின் நலனுக்காக முடிவு செய்யப்பட்டது.

ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய நிதியை போராடியாவது பெறுவோம். இதற்காக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x