Published : 30 Mar 2015 06:42 PM
Last Updated : 30 Mar 2015 06:42 PM

நான் கண்ட பெற்றோரின் செயல்: அதியன்

கட்டுரை: பத்தா >ம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அதியன் கருத்து:

சட்டக் கல்லூரி மாணவர்கள் போல மற்றவர்களும் நடந்து கொண்டால் ஆசிரியர் எப்படி பொறுப்பு?

எனக்கு தெரிந்த ஒரு விவரம். 5ஆம் வகுப்புவரை படித்த ஒரு ஆடோ ஓட்டுநர் தனது பெண்ணை எப்படியோ ஒரு பிரபல ஆங்கில பள்ளியில் சேர்த்தார். அவர் மனைவி சுத்தமாக படிக்காதவர். அந்தப் பெண்ணுக்கு எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதே விருப்பம்.

அந்த ஓட்டுநர், வகுப்பு ஆசிரியரிடம் சொல்கிறார்... "நான் கொடுக்கும் காசில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதனால் அவளை படிக்கவைத்து தேற வைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டால் நீங்கள் முழு உருவத்துடன் நடமாட முடியாது என்பதை நினைவுகொள்ளுங்கள்".

இது எப்படி. பள்ளியில் 6 மணிநேரம்தான்; மீதி 18 மணி நேரமும் பெற்றோருடன் தான். அஞ்சி அந்த ஆசிரியை தனது வேலையை வேறு வகுப்புக்கு மாற்றிக்கொண்டார். இது தான் பெரும்பாலான பெற்றோரின் நடத்தை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x