Last Updated : 14 Feb, 2015 10:54 AM

 

Published : 14 Feb 2015 10:54 AM
Last Updated : 14 Feb 2015 10:54 AM

சட்டப்படி நடப்பேன்: பிஹார் ஆளுநர் உறுதி

பிஹாரில் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராகத் தொடர்வது குறித்து சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவேன் என மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்துள்ளார்.

வரும் 20-ம் தேதி ஜிதன் ராம் மாஞ்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பிஹார் சட்டப்பேரவை கூட்டுக் கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகே உரிய முடிவு எடுக்கப்படும். குதிரை பேரம் குறித்து நிதிஷ் குமார் பேசியுள்ளார். அவர் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், மக்களுக்கு தவறான தகவலைத் தரக் கூடாது. மாஞ்சியை நான் 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என நிதிஷ் குமார் விரும்பினார். ஆனால், நான் சட்ட விதிமுறைகளின்படி நடந்து கொண்டேன். அரசியல் விளை யாட்டுகளில் என்னைத் தொடர்பு படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x