Published : 23 Feb 2015 09:44 PM
Last Updated : 23 Feb 2015 09:44 PM

சந்தானத்தின் இனிமே இப்படித்தான்!

சந்தானம் நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு 'இனிமே இப்படித்தான்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற முருகானந்த் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். சந்தானத்தின் ஜோடியாக அஸ்னா மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கு 'இனிமே இப்படித்தான்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் சந்தானம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு, உடனடியாக புதிய படத்தை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

உதயநிதியுடன் நடித்திருக்கும் 'நண்பேன்டா', ஆர்யாவுடன் நடித்திருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' உள்ளிட்ட படங்களையும் சந்தானம் முடித்து கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x