Last Updated : 11 Feb, 2015 01:09 PM

 

Published : 11 Feb 2015 01:09 PM
Last Updated : 11 Feb 2015 01:09 PM

விரைவில் என்னை அறிந்தால் பாகம் 2: கெளதம் மேனன் திட்டம்

'என்னை அறிந்தால்' படத்துக்கு கிடைத்துள்ள கலவையான வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கெளதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை 'என்னை அறிந்தால்' திரைப்படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வரவேற்பைப் பெற்றால் படத்தின் இரண்டாம் பாகத்தினை திட்டமிட்டு இருப்பதாக கெளதம் மேனன் முன்பே தெரிவித்து இருந்தார்.

தற்போது, படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை முடித்து அஜித்திடம் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன். முழுக்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும், அவருடைய 15 வயது மகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம். இதில் போலீஸ் அதிகாரி பாகங்கள் முற்றிலுமாக இல்லாமல் கூற இருக்கிறாராம் கெளதம் மேனன். இப்படம் குறித்து இறுதி முடிவு என்பது தற்போது அஜித்திடம்தான் இருக்கிறது.

தற்போது சிம்பு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை ஐங்கரன் நிறுவனத்துக்காக இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x