Last Updated : 10 Dec, 2014 01:04 PM

 

Published : 10 Dec 2014 01:04 PM
Last Updated : 10 Dec 2014 01:04 PM

சிரிச்சா போச்சு குழுவைப் பாராட்டிய தனுஷ்

தன்னை தினமும் சிரிக்க வைக்கும் 'சிரிச்சா போச்சு' குழுவிற்கு நன்றி என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' என்னும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ராதிகா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் 'அது இது எது' நிகழ்ச்சியில் 'சிரிச்சா போச்சு' என்ற ஒரு சுற்று இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை தங்களது காமெடியால் சிரிக்க வைக்க வேண்டும். 'சிரிச்சா போச்சு' என்ற சுற்றுக்கு யு-டியூப் தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இக்குழுவிற்கு தனுஷ் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து, "ஜெயச்சந்திரன், சிங்கப்பூர் தீபன், வடிவேல் பாலாஜி, திவாகர், அமுதவாணன், பழனி பட்டாளம், ராமர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தினமும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x