Last Updated : 16 Dec, 2014 04:46 PM

 

Published : 16 Dec 2014 04:46 PM
Last Updated : 16 Dec 2014 04:46 PM

பொங்கல் விருந்துக்கு தயாராகுமா?- என்னை அறிந்தால் அப்டேட்ஸ்

'என்னை அறிந்தால்' படத்தின் முதல் பாதி பணிகள் அனைத்துமே முடிவுற்று, இரண்டாம் பாதி பணிகள் துவங்கியிருக்கிறது என்கிறது படக்குழு.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் கொடுக்க வேண்டும் என்றும், இதனால் பொங்கலுக்கு படம் வெளியாகாது என்று தகவல்கள் பரவின.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "ஹைதராபாத்தில் இருந்து இப்போதுதான் திரும்பி இருக்கிறோம். படத்தின் பணிகள் அனைத்துமே திட்டமிட்டபடி முடித்துவிட்டோம். பொங்கல் வெளியீடு என்பது உறுதியாக இருக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

படத்தின் முதல் பாதியின் இறுதிகட்டப் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இரண்டாம் பாதியின் பணிகளில் இன்னும் சிறு சிறு காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது" என்றார்கள்.

இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, 'வீரம்' சிவா இயக்கவிருக்கும் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் அஜித். இப்படத்தினையும் ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x