Published : 01 Dec 2014 01:28 PM
Last Updated : 01 Dec 2014 01:28 PM

காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம் உள்பட 5 மாநிலங் களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நாமக்கல்லை தலைமையிட மாகக் கொண்டு தென் மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன.

அந்த லாரிகள் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் (ஐஓசி), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேசன் (ஹெச்பிசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேசன் (பிபிசி) ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

புதிய டெண்டரில் ஒப்பந்தம் மறுக்கப்பட்ட லாரிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி, வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x