Published : 23 Dec 2014 11:05 AM
Last Updated : 23 Dec 2014 11:05 AM

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா சாம்பியன்

ஹங்கேரியில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான உலக யூத் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது.

இந்தப் போட்டியின் 10-வது மற்றும் இறுதிச் சுற்றில் இந்திய அணி துருக்கியை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. மொத்தமாக 18 புள்ளிகள் பெற்ற இந்தியா முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனது. இந்தியா 2007, 2008, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் யூத் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வென்றுள்ளது.

இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், கார்த்திகேயன் முரளி ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் 2500 ரேட்டிங்கைக் கடந்து செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்கள். இருவரும் 15 வயதில் இந்தப் பெருமையை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x