Published : 05 Jul 2019 07:22 AM
Last Updated : 05 Jul 2019 07:22 AM

கடவுள் கொடுத்த பரிசு!

வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஆன்மிக நிகழ்வுகள்’ நிகழ்ச்சியை வித்தியாசமாக வழங்கி வருகிறார் பிரவீனா குமாரி.

‘‘சொந்த ஊர் நாகர்கோவில். தமிழ் மீதான  ஆர்வமும், தமிழ் பேசுவதில் கிடைத்த ஆத்ம திருப்தியும்தான் என்னை செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளினி ஆக்கியது. இப்பணியை முழு ஈடுபாட்டுடன் செய்வதற்கு கிடைத்த பரிசுதான்  வேந்தர் டிவியின் ஆன்மிக நிகழ்ச்சி. சிறிய வயதிலேயே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது கடவுள் கொடுத்த பரிசு. தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் என அனைத்து மத நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இதன் சிறப்பு. இதுபோன்ற நிகழ்ச்சி என்னை பண்படுத்துகிறது’’ என்கிறார் பிரவீனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x