Last Updated : 06 Jul, 2019 03:00 PM

 

Published : 06 Jul 2019 03:00 PM
Last Updated : 06 Jul 2019 03:00 PM

ஒரே கட்டமாக கார்த்தி - ஜீத்து ஜோசப் படப்பிடிப்பு நிறைவு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பை, ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு.

'தேவ்' படத்தைத் தொடர்ந்து 'கைதி', பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம், ஜீத்து ஜோசப் இயக்கும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கினார். இதில் 'கைதி' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதனால், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படம் தாமதமாகும் என கருதப்பட்டது. ஆனால், பாக்கியராஜ் கண்ணன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜீத்து ஜோசப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கார்த்தி.

இதன் 65 நாட்கள் படப்பிடிப்பையும், ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டார் ஜீத்து ஜோசப். அதன்படி ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, ஜுலை 5-ம் தேதியுடன் முடிவுற்றது. இதில் கார்த்தி - ஜோதிகா இருவரும் அக்கா - தம்பியாக நடித்துள்ளார். சத்யராஜ், செளகார் ஜானகி, நிகிலா விமல், ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கோவா மற்றும் கோயம்புத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தியுள்ளது படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அக்டோபர் மாதத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

ஜீத்து ஜோசப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x