Published : 12 Jul 2019 01:02 PM
Last Updated : 12 Jul 2019 01:02 PM

‘ஆடை’ படத்துக்காக பக்திப் பாடல் பாடிய பி.சுசீலா

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படத்துக்காக, பக்திப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் பி.சுசீலா.

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

படம் நேரடி ஒலிப்பதிவு என்பதால், இந்தப் படத்தில் டப்பிங் பணிகள் கிடையாது. இதனால், இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக முடிவடைந்தன. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வருகிற 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஆடை’ படத்தில் பக்திப் பாடல் ஒன்றை பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா பாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் ரத்னகுமார். 70 வருடங்களுக்கு முன்பு பி.சுசீலா பாடிய ஒரு பக்திப் பாடலை, மறுபடியும் ரெக்கார்டிங் செய்து பயன்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x