Last Updated : 13 Aug, 2017 01:15 PM

 

Published : 13 Aug 2017 01:15 PM
Last Updated : 13 Aug 2017 01:15 PM

‘பூமி’ படத்துக்குப் பிறகு ‘முன்னாபாய் 3’ தொடங்கும்: சஞ்சய் தத் அறிவிப்பு

‘பூமி’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ‘முன்னாபாய் 3’ஆம் பாகத்தில் முழு கவனம் செலுத்தவிருப்பதாக நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.

2003ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ படம், சஞ்சய் தத்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளிலும் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதன் இரண்டாம் பாகமான ‘லகே ரஹோ முன்னாபாய்’, 2006ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகமும் வெளியாகவுள்ளது

சஞ்சய் தத் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருப்பதால் ‘முன்னாபாய்’ படத்தில் முதலில் நடித்திருக்கலாமே என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "அதைப் பற்றி அபிஜத் ஜோஷியிடம் கேளுங்கள். அந்தக் கதையை அவர் பல வருடங்களாக எழுதி வருகிறார்" என தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா பதிலளித்தார்.

"தத், வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருந்தார். அவரை நாங்கள் பல காலம் காக்க வைக்க முடியும்? அவர் எப்போது மூன்றாம் பாகம் பற்றி கேட்டாலும், வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்போம். திரைக்கதை தயாரானவுடன் உடனடியாக படத்தை ஆரம்பிப்போம்."

இதுபற்றி பேசிய சஞ்சய் தத், "எனது வாழ்க்கையில் சிறந்த படமான ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’ஸை எனக்குத் தந்தவர்கள் ராஜூவும், அபிஜத்தும். ‘பூமி’ படத்துக்குப் பிறகு ‘முன்னாபாய் 3’ல் மட்டுமே முழு கவனம் செலுத்தவுள்ளேன்" என்றார்.

‘பூமி’ திரைப்படம் செப்டம்பர் 22 அன்று வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x