Published : 21 Aug 2017 01:11 PM
Last Updated : 21 Aug 2017 01:11 PM
'விஐபி 2' திருட்டுத்தனமாக பார்த்த கேரவன் ஓட்டுநரை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
ஆகஸ்ட் 11-ம் தேதி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' வெளியாகியுள்ளது. தாணு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
தற்போது தமிழ்த் திரையுலகில் திருட்டு விசிடி என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதில் 'வேலையில்லா பட்டதாரி 2' படமும் சிக்கியுள்ளது.
இந்நிலையில், தனது ஓட்டுநர் திருட்டுத்தனமாக 'வேலையில்லா பட்டதாரி 2' பார்த்ததால் கடுமையாக சாடியுள்ளார் வரலட்சுமி.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் கூறியிருப்பதாவது:
இப்போது தான் எனது கேரவன் ஓட்டுநர் கள்ளத்தனமாக 'வேலையில்லா பட்டதாரி 2' படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். கோபம் வந்து திட்டித் தீர்த்தேன். திரைத் துறையால் லாபம் அடைபவர்களே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். பைரசியை நிறுத்துங்கள்.
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT