Published : 16 Aug 2017 12:24 PM
Last Updated : 16 Aug 2017 12:24 PM
வடிவேலு நடிக்கவுள்ள 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக உடல் இளைக்க முடிவு செய்துள்ளார் வடிவேலு.
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார். லைகா நிறுவனம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.
அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 'மெர்சல்' படத்தில் வடிவேலு நடிக்கத் தொடங்கினார். இதனால் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது.
தற்போது 'மெர்சல்' படத்தில் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக முடிவுற்றதால், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்துக்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கதாபாத்திரத்துக்காக உடல் இளைக்க தீவிர பயிற்சி செய்து வருகிறார் வடிவேலு.
படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், வடிவேலுவுடன் நடிக்கவிருப்பவர்களின் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT