Published : 17 Aug 2017 05:35 PM
Last Updated : 17 Aug 2017 05:35 PM
ஆகஸ்ட் 18-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, திருட்டு விசிடி, பெப்சி ஊழியர்கள் பிரச்சினை என பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது தமிழ் திரையுலகம். இதனால் பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் படத் தயாரிப்பை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு, அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பதாவது:
தற்போது தமிழ் திரைப்படத் துறையில் நிலவி வரும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியிருப்பதால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT