Published : 22 Aug 2017 02:59 PM
Last Updated : 22 Aug 2017 02:59 PM
'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவின் பேச்சு தொடர்பாக அஜித் ரசிகர்களின் சாடலுக்கு இயக்குநர் பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதில் விஜய்யை மிகவும் புகழ்ந்து பேசினார். இதனால் இணையத்தில் அஜித் ரசிகர்கள் பலரும் பார்த்திபனை சாடத் தொடங்கினார்கள்.
இதனை முன்வைத்து இயக்குநர் பார்த்திபன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரிகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். "வேகத்தை விட 'விவேகம்' பெருசு-ஆனால் விவேகத்தை விட அஜீத்தே பெருசு!"
நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். 'ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி'-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெரஸலான மெசேஜ்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT