Last Updated : 05 Aug, 2017 07:14 PM

 

Published : 05 Aug 2017 07:14 PM
Last Updated : 05 Aug 2017 07:14 PM

புஷ்கர் - காயத்ரி இணையின் அடுத்த படத்தையும் தயாரிக்க சஷிகாந்த் திட்டம்

'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணை இயக்கவுள்ள அடுத்த படத்தையும் தயாரிக்க சஷிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார்.

புஷ்கர் - காயத்ரி இணை இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தின் மூலம் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் புஷ்கர் - காயத்ரி இணையின் அடுத்த படத்தையும் தயாரிக்க சஷிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார்.

தாங்கள் வைத்துள்ள 2 கதையின் எண்ணங்களை அப்படியே முழுப்படமாக எழுத திட்டமிட்டு இருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி. அதில் எந்தக் கதை தயாரிப்பாளருக்கு பிடிக்கிறதோ, அதை தொடங்க எண்ணியுள்ளார்கள்.

மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளதால் மாதவன் அங்கு நடைபெறும் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x