Last Updated : 29 Aug, 2017 06:58 PM

 

Published : 29 Aug 2017 06:58 PM
Last Updated : 29 Aug 2017 06:58 PM

அமீர் நடிப்பில் உருவாகும் ’எம்.ஜி.ஆர். பாண்டியன்’

ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'எம்.ஜி.ஆர் பாண்டியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'சந்தனத்தேவன்' படத்தை இயக்கிக் கொண்டே புதிய படமொன்றில் நாயகனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமீர். நாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். இப்படத்தை தயாரித்து இயக்கவுள்ள ஆதம்பாவா கூறியிருப்பதாவது:

'அமைதிப்படை'க்குப் பிறகு மீண்டும் ஒரு முழுமையான அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடி வரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது

கதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்த்ராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து ,பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்

ஏற்கெனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அமீர் 'வட சென்னை' மற்றும் 'சந்தனத்தேவன்' படங்களில் பிஸியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையே தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இவ்வாறு ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x