Published : 31 Aug 2017 06:46 PM
Last Updated : 31 Aug 2017 06:46 PM
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தை, தமிழகத்தில் சொந்தமாக வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' திரைப்படம், தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதன் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தாங்களே நேரடியாக விநியோகம் செய்யவுள்ளோம். யாரிடமும் விநியோக உரிமையைக் கொடுப்பதாக இல்லை என்று தெரிவித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகத்தின் பல்வேறு முன்னணி திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்டுள்ளது.
மேலும், 'மெர்சல்' டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT