Last Updated : 17 Aug, 2017 12:05 PM

 

Published : 17 Aug 2017 12:05 PM
Last Updated : 17 Aug 2017 12:05 PM

துருவங்கள் 16 போலவே பாடல்களின்றி உருவாகும் நரகாசூரன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'நரகாசூரன்' படமும், 'துருவங்கள் 16' போலவே பாடல்களின்றி உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

'துருவங்கள் பதினாறு' வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் 'நரகாசூரன்'. இதில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

இதன் படப்பிடிப்புக்காக இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கார்த்திக் நரேன். 'துருவங்கள் 16' போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் இயக்க இருக்கிறார்.

மேலும், 'துருவங்கள் 16' போல இப்படத்தையும் பாடல்கள் ஏதுமின்றி உருவாக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'துருவங்கள் பதினாறு' குழுவே பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x