Last Updated : 30 Jul, 2017 03:17 PM

 

Published : 30 Jul 2017 03:17 PM
Last Updated : 30 Jul 2017 03:17 PM

தமிழ்ப் படம் 2-ம் பாகம் விரைவில் தொடக்கம்: இயக்குநர் சி.எஸ்.அமுதன்

'தமிழ்ப் படம்' படத்தின் 2-ம் பாகம் விரைவில் துவங்கப்படும் என்று இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது  'தமிழ்ப் படம்' 2-ம் பாகம் தொடங்கப்பட்டு இருப்பதாக சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார். சிவா நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை சஷிகாந்த் தயாரிக்கவுள்ளார். விரைவில் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

'தமிழ்ப் படம்' படத்தைத் தொடர்ந்து 'இரண்டாவது படம்' என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x