Last Updated : 15 Jul, 2017 12:05 PM

 

Published : 15 Jul 2017 12:05 PM
Last Updated : 15 Jul 2017 12:05 PM

உற்சாகமும் பெருமையும் அளிக்கிறது தமிழக அரசின் விருது: ஜீவா மகிழ்ச்சி

தமிழக அரசின் விருது உற்சாகமும் பெருமையும் அளிப்பதாக ஜீவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்காக சிறந்த நடிகர் விருதினை வென்றுள்ளார் ஜீவா.

இது குறித்து ஜீவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம். அது போல் விருதுகளும் முக்கியம். கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்களை உற்சாக மனநிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும்.

அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக்குழுவினருக்கும் என் நன்றி. இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங்களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x