Published : 08 Jul 2017 06:40 PM
Last Updated : 08 Jul 2017 06:40 PM
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கவுள்ள 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடக்கத்துக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. வடிவேலு நடிக்கவுள்ள இப்படத்தை ஷங்கர் தயாரிக்கவுள்ளார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் ஷங்கரிடம் தயாரிப்பு பணிகளைக் கொடுத்துள்ளது.
ஜூலை 8, 2006-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகளாகிறது. அதனை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர், "புலிகேசி படம் வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
11th year of Pulikesi .Part 2 to start soon. >pic.twitter.com/bct8Px4Mp4
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. சபேஷ் - முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT