Published : 29 Jul 2017 12:00 PM
Last Updated : 29 Jul 2017 12:00 PM
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகும் 'தடம்' படத்துக்காக 3 நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து 'தடம்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அருண்விஜய். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.
முதற்கட்ட படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு காலில் அடிபட்டதால், சில நாட்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கதைப்படி மூன்று நாயகிகள் இருப்பதாகவும், விரைவில் யாரென்று தெரியவரும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
தற்போது தான்யா, ஸ்மிருதி, வித்யா ஆகியோரை படக்குழு நாயகிகளாக முடிவு செய்துள்ளார்கள். விரைவில் தொடங்கவுள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இவர்கள் மூவரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மேலும், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சாஹோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அருண்விஜய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT