Published : 24 Jul 2017 07:42 PM
Last Updated : 24 Jul 2017 07:42 PM
விஜய் மில்டன் இயக்கி வரும் 'கோலி சோடா 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.
ஜூலை 10-ம் தேதி முதல் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் மில்டன் இயக்கி தயாரித்து வருகிறார்.
முழுக்க புதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டுப் பின்னணியில் அமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மிக முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகிறார்.
இது குறித்து இயக்குநர் விஜய்மில்டன் கூறியிருப்பதாவது:
'கோலி சோடா'வின் முதல் பாகத்தில் வந்து கலக்கிய ATM கதாபாத்திரத்தை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் வருவார்.
அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படும் விஷயமாகவும் இருக்கும். இதைத் தவிர மேலும் பல ஆச்சரியங்கள் இப்படத்தில் காத்திருக்கிறது. மிக வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் விஜய்மில்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT