Last Updated : 07 Jan, 2014 11:37 AM

 

Published : 07 Jan 2014 11:37 AM
Last Updated : 07 Jan 2014 11:37 AM

தனிமையில் வாழவே விரும்புகிறேன் : சல்மான்கான் பேட்டி

திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லை.. தனிமையில் வாழவே விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

நேற்று மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சல்மான்கான். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அவர் பேசியது, " நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதைப் பற்றி என்னால் விவரித்து கூற முடியாது.

எனக்கு திருமணம் செய்து கொள்வதிலோ, பெண் தோழிகள் வைத்து கொள்வதிலோ விருப்பமில்லை. பொய் பேச வேண்டிய அவசியமில்லை. என் வாழ்வில் யாராவது குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். வருபவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பை இனியும் தொடருவேன்.” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x