Last Updated : 30 Mar, 2017 01:05 PM

 

Published : 30 Mar 2017 01:05 PM
Last Updated : 30 Mar 2017 01:05 PM

ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை 2-ம் பாக கதைகள் தயார்: செல்வராகவன்

'ஆயிரத்தில் ஒருவன்', 'புதுப்பேட்டை' படங்களின் 2ம் பாகம் உருவாகும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. கவுதம் மேனன் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது படக்குழு.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். இவ்விரண்டு படங்களின் 2-ம் பாகம் குறித்து அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகிறார் செல்வராகவன்.

தற்போது, "'ஆயிரத்தில் ஒருவன்', 'புதுப்பேட்டை' இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது எடுக்க நேரமில்லை. மற்ற படங்கள் இருக்கிறது !" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x