Published : 21 Jan 2017 05:45 PM
Last Updated : 21 Jan 2017 05:45 PM
இளைஞர்களின் போராட்டத்துக்கு இயக்குநர் சிம்புதேவன், கார்ட்டூன் மூலமாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இதற்கு தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். இப்போராட்டத்துக்கு இயக்குநர் சிம்புதேவன் கார்ட்டூன் வரைந்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அக்கார்ட்டூன் இதோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT