Last Updated : 26 Oct, 2013 07:15 PM

 

Published : 26 Oct 2013 07:15 PM
Last Updated : 26 Oct 2013 07:15 PM

மஹதீராவை பின்னுக்கு தள்ளிய அத்திரண்டிகி தாரேதி!

தெலுங்கு திரையுலகில் 'அத்திரண்டிகி தாரேதி' படத்தின் வசூல் முதல் இடத்தினைப் பிடித்திருக்கிறது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யாண் நடித்த 'அத்திரண்டிகி தாரேதி' படம் உலகளவில் இந்தி திரைப்படங்களுக்கு நிகராக வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இதுவரை எந்த ஒரு படத்தின் நன்றி தெரிவிப்பு விழாவிலும் கலந்துக் கொள்ளாத பவன் கல்யாண், முதன் முறையாக, இப்படத்தின் விழாவில் பங்கேற்றார். அனைத்திற்கும் தனது ரசிகர்களும், இயக்குநர் த்ரிவிக்ரமும் தான் காரணம் என்று பேசினார்.

படம் அனைத்து இடங்களிலும் வசூலைக் குவித்ததால், கண்டிப்பாக ராஜமெளலியின் 'மஹதீரா' படத்தின் வசூலை முறியடிக்கும் என்று கூறி வந்தார்கள்.

தற்போது 'அத்திரண்டிகி தாரேதி' படத்தின் வசூல் 'மஹதீரா' படத்தில் வசூலை தாண்டியிருக்கிறது. படப்பிடிப்பு செய்து, இணைக்க வேண்டாம் என்று வைத்திருக்கும் காட்சிகளைக் கூட இப்போது படத்தில் இணைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். அவ்வாறு செய்தால் இன்னும் வசூல் கூடும் என்று திட்டம்.

இப்படத்தின் மெகா வெற்றி குறித்து இயக்குநர் ராஜமெளலி “'அத்திரண்டிகி தாரேதி' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அனைத்திற்கும் காரணம் பவன் கல்யாண் ரசிகர்கள் தான்.

தெலுங்கு படம் 100 கோடி வசூலை குவிக்கும் என்று 5 வருடங்கள் முன்பு கூறினார் ஷாம் பிரசாத் ரெட்டி. அவரது எண்ணத்தினை தற்போது 'அத்திரண்டிகி தாரேதி' படம் நனவாக்கிருக்கிறது. இதனால் 'அத்திரண்டிகி தாரேதி' படக்குழுவிற்கு மட்டும் பெருமையல்ல.. ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகிற்கே பெருமை.” என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x