Published : 05 Oct 2013 12:51 PM
Last Updated : 05 Oct 2013 12:51 PM

பென்சில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்!

'பென்சில்' என்னும் படத்தின் மூலம் நாயகனாக உருவாகவிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'ராஜா ராணி' என தனது இசையின் மூலம் இளைஞர்களின் மனதை கட்டிப் போட்டவர் ஜி.வி.பிரகாஷ்.

'மதயானைக்கூட்டம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகிருக்கும் இவர், தற்போது நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார்.

முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. அப்படம் அடுத்தகட்டத்துக்கு நகராமல் அப்படியே இருக்கவே, தற்போது கெளதம் மேனனிடம் உதவியாளராக இருந்த மணி நாகராஜ் என்பவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் துவங்கவிருக்கிறது. ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்க, ஜி.வியே இசை பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.

படத்திற்கு 'பென்சில்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். 12ம் வகுப்பு படம் மாணவனாக நடிக்கவிருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x