Last Updated : 15 Jun, 2016 06:16 PM

 

Published : 15 Jun 2016 06:16 PM
Last Updated : 15 Jun 2016 06:16 PM

2.0 படப்பிடிப்பு 50% நிறைவு: இயக்குநர் ஷங்கர் தகவல்

100 நாட்கள் படப்பிடிப்பில் '2.0' படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவுற்று இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அக்‌ஷய்குமார் நடிக்க சில முக்கியமான காட்சிகளை சென்னையில் காட்சிப்படுத்தி வருகிறார் ஷங்கர்.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஷங்கர், "இன்று '2.0' படப்பிடிப்பின் 100வது நாள். இதுவரை ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் பங்கேற்ற 2 முக்கியமான சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் அடங்கும். 50% படப்பிடிப்பு நிறைவுற்று இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

படப்பிடிப்பு நடைபெற்று வரும் சமயத்தில், மறுபுறம் முடிவடைந்த காட்சிகளுக்கு கிராபிக்ஸ் பண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தாண்டு செப்டம்பரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 2017 கோடை விடுமுறைக்கு படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x