Last Updated : 02 Jun, 2016 10:04 AM

 

Published : 02 Jun 2016 10:04 AM
Last Updated : 02 Jun 2016 10:04 AM

மீண்டும் தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் சேதுபதி

'ஆரஞ்சு மிட்டாய்', 'மேற்கு தொடர்ச்சி மலை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை தயாரித்திருக்கிறார்.

'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். விஜய் சேதுபதி அப்படத்தை தயாரிப்பது மட்டுமன்றி, அதில் நாயகனாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் 'றெக்க', 'ஆண்டவன் கட்டளை', கே.வி.ஆனந்த் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x