Published : 23 Sep 2013 12:16 PM
Last Updated : 23 Sep 2013 12:16 PM

இணையத்தில் பவன் கல்யாண் படம்.. அதிர்ச்சியில் ஆந்திரா

'Attharintiki Daaredi' திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘Attharintiki Daaredi’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது.

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து 'Attharintiki Daaredi' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள்.

ஆகஸ்ட் 9ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் தெலங்கானா பிரச்சினை வலுவானதால், அங்கு எந்த படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டு தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் உடனடியாக படத்தினை செப்டம்படர் 27ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில் “‘Attharintiki Daaredi’ படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். Piracy லிங்குகளை ad@apfilmchamber.com மற்றும் legal@apfilmchamber.com என்ற இமெயில் முகவரி அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x