Published : 18 Aug 2016 04:24 PM
Last Updated : 18 Aug 2016 04:24 PM
கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கெளதம் கார்த்திக்
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், பிரயாகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கினார் இயக்குநர் கண்ணன். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
தற்போது கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் கண்ணன். செப்டம்பர் 12-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார்.
நாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆஷாஸ்ரீ தயாரிக்க இருக்கிறார். சென்னையிலே முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT