Published : 17 Oct 2014 10:12 AM
Last Updated : 17 Oct 2014 10:12 AM

தூய்மை இந்தியா பிரச்சாரம்: சாலைகளை சுத்தப்படுத்தினார் சானியா

பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா’ எனும் திட்டத்தை கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் தொடங்கி வைத்தார். பிரதமரின் அழைப்பை ஏற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நேற்று ஹைதராபாத்தில் பிராஷன் நகர் பகுதி சாலைகளை சுத்தப்படுத்தினார்.

இதில் சானியா மிர்ஸாவுடன் ஏராள மான தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர். அதன் பின்னர் சானியா மிர்ஸா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘தூய்மை இந்தியா' திட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரதமர் எனக்கு அழைப்பு விடுத்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது நாட்டை தூய்மையாக வைத்து கொள்வது நமது அனைவரின் கடமையாகும். இதேபோல், இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும்படி தெலங்கானா ஐ.டி துறை அமைச்சர் கே. டி. ராமாராவ் அவர்களுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x