Last Updated : 10 Oct, 2013 11:46 AM

 

Published : 10 Oct 2013 11:46 AM
Last Updated : 10 Oct 2013 11:46 AM

இரண்டு பாகங்களாக பாஹுபாலி!

ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து ராஜமெளலி இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் 'பாஹுபாலி'. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகிவருகிறது.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் ராஜமெளலி.

ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களையுமே படமாக்கி வரும் ராஜமெளலி, குறுகிய கால கட்டத்தில் ஒவ்வொரு பாகமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறாராம்.

இதற்கு முன்பு ராம் கோபால் வர்மா இயக்கிய 'ரத்த சரித்திரா' படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கமலின் 'விஸ்வரூபம்' படமும் இரண்டாவது பாகம் தயாராகி கொண்டிருக்கிறது.

'ரத்த சரித்திரா' படத்தினைத் போன்று ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் இப்போதே முடித்துவிட முனைப்புடன் செயல்படுகிறாராம் ராஜமெளலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x