Last Updated : 13 Oct, 2014 12:58 PM

 

Published : 13 Oct 2014 12:58 PM
Last Updated : 13 Oct 2014 12:58 PM

கத்திக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ஒரு படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தலையிட முடியாது என்று கூறி, 'கத்தி' படத்துக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுப்படி செய்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது லைக்கா நிறுவனம். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக 22-ம் தேதி வெளிவர இருக்கிறது.

இதனிடையே, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' ஆகிய இரு படங்களுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின், இதில் தலையிட முடியாது" என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

முன்னதாக வழக்கறிஞர் ரமேஷ் தனது மனுவில், "லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ’கத்தி’ மற்றும் ’புலிப்பார்வை’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள் ளன. மேலும், அந்தப் படத்தில் இலங்கையில் பாலியல் பலாத்காரத் துக்கு ஆளான பெண்கள் அமைதியாக வாழ்வதாக வும், தமிழர், சிங்களர் ரத்தம் மூலம் புதிய இனம் உருவாவதாகவும், அவர்கள் சேர்ந்து வாழ்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்தை மோசமாக சித்தரித்துள்ளனர். இந்தப் படத்தில் குழந்தைகள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டதும், பாலச்சந்திரனை சீன ராணுவம் கொலை செய்ததாகவும் கூறப்பட் டுள்ளது.

இரு திரைப்படங்களிலும் தமிழர்களை தேச விரோதிகளா கவும், தீவிரவாதிகளாகவும் காட்டி உள்ளனர். கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

இரு திரைப்படங்களுக்கும் தடை விதிக்கக்கோரி, தமிழக காவல் துறை இயக்குநருக்கு மனு அனுப் பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது

இந்த வழக்கின் விசாரணையின் போது, "படத்தை பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் எதையும் கூற முடியாது. சென்சார் போர்டு அனுமதி வழங்கி உள்ளது. படத்தில் ஆட்சேபகர மான காட்சிகள், வசனங்கள் இருந்தால் சென்சார் போர்டில் முதலில் முறையிட வேண்டும். சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் வரலாம்” என்று நீதிபதி கூறியிருந்தது கவனித்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x