Last Updated : 28 Feb, 2017 01:59 PM

 

Published : 28 Feb 2017 01:59 PM
Last Updated : 28 Feb 2017 01:59 PM

மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார்

'குட்டிப்புலி' கூட்டணியான சசிகுமார் - முத்தையா இருவரும், மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

சசிகுமார், லட்சுமிமேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'குட்டிப்புலி'. வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது, முத்தையா இப்படத்தின் மூலமாக தான் இயக்குநராக அறிமுகமானார்.

'மருது' படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளது.

சூர்யாவுக்காக தயார் செய்த கதையை சசிகுமாரை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் முத்தையா. தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

'கொடி வீரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு நாயகி, இதர நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x